Wednesday, 20 July 2011

கைபேசி களவாணிகள்.

நான் airtel இணைப்பு உள்ள ஒரு கைபேசி உபயோகிப்பவன்.
நேற்று மாலை 55 ரூபாய் எனது எண்ணிற்கு recharge செய்தேன்.
அதற்கு அவர்கள் தரும் பேசும் அளவு 43 ரூபாய் மட்டும்.
இதுவல்ல களவு,மறுநாள் காலை மிதமுள்ளதொகை 34 ரூபாய் மட்டுமே.
நான் எந்த அழைப்பும் செய்யாத நிலையில் 121 (கஸ்டமர் கேர் )அவர்களை 
அழைத்து விவரம் கேட்டால்.சிறுதுநேரம் சென்று உங்களுடைய நம்பருக்கு 
lovepack என்ற குறுந்தகவல் இணைக்கப்பட்டுள்ளது.அதற்கான கட்டணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதில் வேடிக்கை அவர்களாகவே முடிவு செய்து அவர்களே என்னுடைய 
கணக்கில் பிடித்தம் செய்து அதன் விவரம் நான் என்னுடைய கணக்கை 
பற்றி கேட்டபிறகு தெரிவிக்கிறார்கள்.
அவர்களிடமே மேலும் விவரம் தாருங்கள் யாருடைய ஒப்புதலின் பேரில் 
இப்படி செய்கிறீர்கள் என்று.உடனே அவர்கள் உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் அதை செயலிழக்க செயதுவிடுகிரோம் என்று செல்லி 
அதற்கான குறுந்தகவலை அனுப்பி வைத்தார்கள்.

இதை அவர்கள் என்னுடைய ஒப்புதலுக்கு குறுந்தகவல் அனுப்பி இருந்தால் எனக்கு இத்தனை நேரமும் பணமும் மனஉளைச்சலும்
இல்லாமல் தவிர்த்திருக்கலாம்.  
 
நான் இதில் கேட்கும் கேள்வி எத்தனை பேர் தினம் தங்களது கணக்கை சரிபார்ப்பார்கள்?
இதுவும் நமக்கு தெரியாமல் அல்லது நமது அவசர நேரத்தை பயன்படுத்தி 
களவு செய்யும் வேலை தானே.  இதைதான் தலைப்பாக தந்தேன்.
நட்புடன் சேகர்..

No comments:

Post a Comment