Thursday, 28 July 2011

காதல் வந்த கதை.

எனக்கும் காதல்வரும்.,என்று எத்தனை பேரால் சொல்ல முடியும்.
அனைவருக்கும் உள்ள காதல் எனக்கும் இருந்தது.
காதல் அது வரும் தனியாக வருமா இல்லை துணை கொண்டு வருமா?
தனியாக வந்தால் அது காதல் அல்ல,துணை கொண்டு வருவதே காதல்.

எதன் மீது காதல் கொண்டாலும்,அதற்கும் வேண்டும் நம்மீது காதல்.

                                          என்காதல் 
 குட்டி குட்டி வளர்த்த தந்தை,
 திட்டி திட்டி வளர்த்த தாய்,
தமக்கை,தனயன்,
தம்பி,தங்கை,
அணைவர்மீதும் காதல் வந்தது.
அதுஒரு பருவம்.
பள்ளிமீது,கால் பந்தின் மீது காதல் வந்தது.
இதுவும் அந்தகாலம்.

பள்ளி முடிக்கும்போது கன்னிமீது வந்ததே காதல்.
இளமை பருவம்.  

இது என்ன காதல்.காதலின் அர்த்தம் அன்று தான் தெரிந்தது.

கவியால் கதை சொன்ன கம்பன், 
கதைக்கு கவி சொன்ன கண்ணதாசன்,
பசியை பாட்டால் நிரப்பிய பாரதி,
இந்த வரிசை இல்லாமல் 
எனக்கும் வந்தது கவிதை.

இதுதான்  கன்னி மீது வரும் காதலா?
காதலித்து பார் காதலும் புரியும் =கவிதையும்!!!!
நட்புடன் சேகர்..

No comments:

Post a Comment