நானும் சாதனையாளந்தான்!!!!
காதலித்த காதல் கதை பள்ளி பருவம்.அதைதான்,
காதல் கதையில் சொன்னேன்.
அதன் பின் நடந்ததெல்லாம் வறுமையின் விளையாட்டு.
அதனை 16 ஆண்டுகள் சந்தித்து என் 30 வது வயதில்,
நான் சந்தித்த இன்றைய மனைவி கலாவதி.
1982 மார்ச் மாதம் மாலை நேரம் நாசே நிறுவனம்.
அன்று தோன்றவில்லை இவர்கள் தான் என் துணை என்று.
மூன்று நாள் முடிந்து நான்காம் நாளில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
முடிவெடுத்தேன் கேட்டும் விட்டேன் என் மனைவியாக சம்மதமா.
முடிவு சொல்ல அவகாசம் கேட்டார்.காத்திருந்தேன் ஒருமாதம்.
எண்ணிதுணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
இதற்கு உதாரணம் என்மனைவி.
முடிவு வந்தபின் காத்திருப்பு,என் தமைக்கையின் திருமணம்.
1984 பிப்ரவரி மணம் முடித்து வாழ்க்கை ஆரம்பம்.
இதுவல்ல நான் சொன்ன சாதனையாளன்.
2011 இது நாள் வரை எனக்காக,என் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு .
நான் செய்யும் அத்துணை செயல்களிலும் துணைநின்று,
பொருளால்,உடலால்,உள்ளத்தால்,ஏற்பட்ட இழப்புக்களை, வலிகளை
கிஞ்சித்தும் மனம்கோணமல்,வாழ்ந்து வரும் என் காதல்மனைவி கலாவதி.
பார்ப்பது,பேசுவது ,கொஞ்சுவது இதுவெல்லாம் தெரியாது.
என்காதல் மனைவிக்கு,என்னை மட்டும் காதலிக்க தெரியும்.
இன்றுவரை நான் வாழும் வாழ்க்கை என்னை சார்ந்து வாழ்ந்த
அனைவருக்காகவும் வாழ்ந்து வரும் என்காதல் மனைவியை
காதலித்து மனம் கொண்டதும் என் சாதனைதானே.
காதலிப்பது கடினமல்ல காதலை கடைசி வரை கடைபிடிப்பது
அதுதான் சாதனை.நானும் சாதனையாளன் இன்றுவரை.
நட்புடன் சேகர்..
காதலித்த காதல் கதை பள்ளி பருவம்.அதைதான்,
காதல் கதையில் சொன்னேன்.
அதன் பின் நடந்ததெல்லாம் வறுமையின் விளையாட்டு.
அதனை 16 ஆண்டுகள் சந்தித்து என் 30 வது வயதில்,
நான் சந்தித்த இன்றைய மனைவி கலாவதி.
1982 மார்ச் மாதம் மாலை நேரம் நாசே நிறுவனம்.
அன்று தோன்றவில்லை இவர்கள் தான் என் துணை என்று.
மூன்று நாள் முடிந்து நான்காம் நாளில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
முடிவெடுத்தேன் கேட்டும் விட்டேன் என் மனைவியாக சம்மதமா.
முடிவு சொல்ல அவகாசம் கேட்டார்.காத்திருந்தேன் ஒருமாதம்.
எண்ணிதுணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
இதற்கு உதாரணம் என்மனைவி.
முடிவு வந்தபின் காத்திருப்பு,என் தமைக்கையின் திருமணம்.
1984 பிப்ரவரி மணம் முடித்து வாழ்க்கை ஆரம்பம்.
இதுவல்ல நான் சொன்ன சாதனையாளன்.
2011 இது நாள் வரை எனக்காக,என் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு .
நான் செய்யும் அத்துணை செயல்களிலும் துணைநின்று,
பொருளால்,உடலால்,உள்ளத்தால்,ஏற்பட்ட இழப்புக்களை, வலிகளை
கிஞ்சித்தும் மனம்கோணமல்,வாழ்ந்து வரும் என் காதல்மனைவி கலாவதி.
பார்ப்பது,பேசுவது ,கொஞ்சுவது இதுவெல்லாம் தெரியாது.
என்காதல் மனைவிக்கு,என்னை மட்டும் காதலிக்க தெரியும்.
இன்றுவரை நான் வாழும் வாழ்க்கை என்னை சார்ந்து வாழ்ந்த
அனைவருக்காகவும் வாழ்ந்து வரும் என்காதல் மனைவியை
காதலித்து மனம் கொண்டதும் என் சாதனைதானே.
காதலிப்பது கடினமல்ல காதலை கடைசி வரை கடைபிடிப்பது
அதுதான் சாதனை.நானும் சாதனையாளன் இன்றுவரை.
நட்புடன் சேகர்..