Wednesday 14 December 2011

காதலும், நட்பும்..

அன்பு நட்புக்களே,  
                                 காதலும்,நட்பும்
வேறு வேறு தளங்கள்,ஆனால் புரிதலின் ஆரம்பம் என்பது
மட்டும் இரண்டுக்கும் பொதுவாய் அமைந்து போனது.

காதல் புரிவது நம்மை அடுத்த பாலருக்கு புரியவைப்பது ,அடுத்த பாலினத்தை புரிய முற்படுவது.
இதன் ஆரம்பம்-சற்று தாமதித்தாலும் -தரம் தாழ்ந்தாலும்
விபிரீதம்-விளைவிக்க தயங்காது.

இதை வாலிபம் தவிர்த்து பார்த்தால்-பல கோணங்கள்
புரியும்.
காதல் புரிய -புரிய கசக்கும்,அல்லது விலகும்.
நட்பு புரிய-புரிய வளரும்-விளங்கும்.
காதலில் அடிப்படை அறிந்து கொள்ள அதற்கு   
இலக்கணம் இல்லை.
நட்பின்அடிப்படை  இலக்கணமே ஏற்பது.

     அண்ணலும் நோக்கி ,அவளும் நோக்கி
                          வந்த காதல்
   அரசகுலம் சந்தித்தது-சரியாய் போனது.

  அம்பிகாபதி ஏன் அமராவதி ஆனது
  சமுதாய ஏற்றமா,சாதிய மாற்றமா?
 தோல்வி கண்ட காதல் எல்லாம் காவியம் ஆனது.
 வெற்றி என்பது காதலுக்கு கிடையாது.

 புரிதலின் ஆரம்பம் காதல் என்றால்,
வெற்றி என்பது புரிந்த தவறாய் முடிந்துவிடும்.
தவறு எப்படி வெற்றியடையும்?
ஆதலால் காதலுக்கு வெற்றி கிடையாது.

நட்பு நம்மை நாம் அறிய நமக்கு கிடைத்த
அற்புத கருவி--
அதை நாம் கையாளும் விதம்-தீமையும்
நன்மையும்,விகிதம் மாறும்.

எப்பொருளும்  ஏற்பது எல்லாம் முழுபயன்
தராது.உணவு உட்பட.

உண்ட உணவில் எத்தனை கழிவு என்பது
யாருக்கு தெரியும்.
இருந்தும் ஏற்கிறோம்,பிரிப்பது நாம் அறியா
வண்ணம் நடப்பது இல்லையா?
ஏற்பது என்பது நட்பின் இலக்கணம்.
கழிவை கழித்து வலு சேர்க்க நட்பு
அவசியம்.
காதல் வரும் கண்டஉடன்-காணாத போதும்.
 
காதலே கூடாதா என்பது போல் அல்லவா
செல்கிறது காதலும்-நட்பும்.முடிவுதான் என்ன?

பாலினம் தவிர்த்து வந்தால் நட்பாய் ஏற்கும்
நாம் எதிர் பாலினத்தை ஏன் காதலால் கவரவேண்டும்?
 
காதலில் வரும் பந்தம் சமுதாய மாற்றம் தரும்
என்று வாதிட்டால்-அதை விட முட்டாள்தனம்
வேறில்லை.

காதல் இல்லாத வாலிபம் விரும்ப தகாதது.
முரணாக இருக்கிறதா!!!
காதலை வேறுவகை படுத்தி ரகசிய சிந்தனையில்
அடைத்ததன் பலன்,   
 காதல் என்பது பலவேறு கோணங்களை சந்தித்து
சீரிழந்து போனது.

சிந்தனை சிதறல்களை செம்மை படுத்தாமல்,
நுனிமழுங்க வைத்தது.

காதல் புரி-புரிகிறவரை-புரியாத போது?

இரை-இன்பம்-இனப்பெருக்கம்,இவை முன்றும்
உயிரினத்தின்  பொது மறை.
இவையன்றி ஏன்-எதற்கு என்ற இறை-தேடியது
மானிட முறை.
மாண்டு-மாண்டு மீண்டாலும்-
சிரிக்கவும்-சிந்திக்கவும் தெரிந்த உங்களுக்கு
தெரியாதா என்ன செய்ய வேண்டும் என்று!!!!    
நட்புடன் சேகர்..

Monday 5 December 2011

விமர்சனம் விமர்சனம்

அன்பு நட்புக்களுக்கு வணக்கம்,
                                                                           ஒருவிமர்சனம் என்பது படைப்பாளியை ஊக்குவிக்க அல்லது திருத்தி கொள்ள             பயன்படவேண்டும்.இது பத்திரிக்கை யாளனுக்கு மிகவும் முக்கியம்.
இன்று தினத்தந்தி சினிமா விமர்சனம் என்னை இதை எழுத தூண்டியது.
போராளி திரு,சமுத்திர கனி இயக்கம் திரு,சசிகுமார் மற்றும் பலரின் கடுமையான உழைப்பில் வெகு  நேர்த்தியாக கையாளப்பட்ட  சமுக சிந்தனை உள்ள தமிழ் படம்.
இதை நான் தனிப்பட்ட முறையில் விவரிப்பது விமர்சனத்தில்  வராது.என்தாக்கத்தின் வெளிப்பாடு

ஒருபொது ஜன பத்திரிகை அதன் விமர்சனம் என்பது எத்தனை தாக்கங்களை உருவாக்கும் என்பதை உணரவேண்டும்  என்பதை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்.
விமர்சனம் எழுதிய நண்பர் கதையின் கருவை அதன் உறவுகளை  மிகவும் தவறாக குறிப்பிட்டு கடமைக்கு எழுதியதாகவே தெரிகிறது.புரியாவிட்டால் மீண்டும் ஒரு முறை படத்தை பார்க்கவும்.
என்னுடைய கடந்தகால சினிமா பார்த்த வரலாற்றில் என்னை தகித்த தாக்கம் செய்த படங்களில் முதல் படம்துலாபாரம். இரண்டாவது மாகநதி,அதன் பிறகு போராளி.
இப்படி சில படங்கள் மட்டுமே சினிமா என்பதை தாண்டி சில சமுதாய தாக்கங்களை உருவாக்கும்.
நண்பர்கள் இது குறித்து இப்பதிவை சரியான தளத்தில் பதிவேற்ற விரும்புகிறேன்.

  நட்புடன் சேகர்..

Monday 8 August 2011

சினிமா விமர்சனம்..

வணக்கம் நடப்புக்களே,
                                                  சனிக்கிழமை(6 /08 /11 )அன்று மதியம் சத்தியம் திரை 
அரங்கில் "தெய்வத்திருமகள்" படம் என்மனைவியுடன் கண்டுவந்தேன்.
 வெகு நாட்கள் சென்று திரையாரங்கில் படம் பார்த்தது புது அநுபவம்தான்.
சத்யம் திரை அரங்கம் புதுவடிவம் பெற்று இன்றுதான் முதன் முதாலாய் 
காணும் சந்தர்ப்பம் கிடைத்தது.
திரைஅரங்கு என்பது இன்றைய  சூழலுக்கு படம் பார்ப்பதை தவிர்த்து 
 ஏனைய பிற விடயங்கள் இருக்கிறது.காசுதான் வேண்டும்.
பாமரன் வந்தால் பரிதவித்து போய்விடுவான்.தமிழ் என்பது மருந்துக்கு கூட,
கிடையாது,ஆங்கிலம் தெரியாவிட்டால் சிறுநீர்கழிக்ககூட கடினம்தான்.
இத்தனையும்  அரங்குக்கு உட்புறம்,வெளிப்புறம் அதே அவலட்சநங்கள்.
வண்டியை நிறுத்த 2 கிலோமீட்டர் சுற்றி வந்து நிறுத்தனும்.அதற்கு 10 ரூபாய் கட்டணம்.இதைஎல்லாம் சகித்து படம் பார்க்க கட்டணம் 120 ரூபாய் மட்டும்.  
இன்னும் நிறைய இருக்கு அதை தனிஒரு பதிவாக தருகிறேன்.

                                                    படத்தைபற்றி     
தலைப்பு மிகவும் அருமை,படத்தின் அத்துணை நடிகர்களையும் ,
தவிர்த்து ஒரு அருமையான குழந்தை நம் மனதை தன்நடிப்பால்
அசரவைக்கிறது.மீண்டும் ஒரு ஷாலினி தமிழுக்கு என்றுதான் 
உணர்தேன்.அத்துணை பஹாவங்களும் சாதரணமாக வருகிறது.
உச்சக்கட்டம் என்பது இயக்குனரின் எண்ணம்.இப்படிமாறும் 
மனநிலை,மிகசிலருக்கு மட்டும்  சொந்தம்,அதையும் கூட மனநிலை 
பாதிப்பில் உள்ளவருக்கு மட்டும் என்பது அதிலும் ஒரு அழுத்தம்,
சரியாக  சொல்வதும்,அன்பைமட்டுமே யாசிப்பதும் இன்றைய 
சூழலில் மனநிலை பதிப்பு உள்ளதாக காண்பித்தது உண்மையின் 
வெளிப்பாடு.
வக்கீலின் இன்றைய நிலை காட்சிக்கு காட்சி சரியாக கட்டப்படுகிறது.
இருந்தும் இப்படியொரு மனிதாபிமானம் உள்ள LJ (lawjaki)சினிமாவில்மட்டும் சாத்தியம்.அதுவும் காதல் வருவது அதைவிட 
அதிகம்.காதநாயக தனமும் வில்லத்தனமும் காட்டப்பட்டாலும்,அடிதடி 
இல்லா அதிசயம்,வரவேற்ப்புக்குரியது.இசை,பட, கோர்ப்பு அருமை.
பணம் அதிகம் இருந்தால் போய் பாருங்கள். நான்பார்த்தது மனைவியின்  
நிர்வாக கணக்கு.நிலா நீண்ட ஆயுளையும் நிறைந்த அறிவையும் பெற்று,
வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
நட்புடன் சேகர்..

Tuesday 2 August 2011

முகநூலும் நானும்.

                                  திங்கள் தினத்தந்தி தந்த சேதி,
முகநூல் பின்னடைவு,உலகஅளவில் எடுத்த கணக்கடுப்பில்,
முகநூல் 15 வயது முதல் 25 வயதுவரை விரும்பிய இப்பக்கம்,
தற்போதய கணக்கடுப்பில் 40 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் தான்,
அதிகம் உள்ளதாகவும்,கூகுள் சமூக இணையதளம் முதலிடம் 
வகிப்பதாக வந்துள்ள செய்தி தெரிவிக்கிறது.
முகநூல் என்பது என்பார்வையில்,
       பால்ய  வயதில் தாய் போல,
      இளம் வயதில் காதலி போல,
     முதுமையில் மனைவிபோல,
     உணர்கிறேன்.
பருவங்கள் மாறும் போது உணர்வுகளும் மாறாத்தன் செய்கிறது.
அதை பகிர்ந்து கொள்ள உறவுகளும் மாறத்தான் வேண்டும்.
இப்படி முகநூலில் மனித முகங்களை மட்டும் தேர்வு செய்து,
நட்பு பாராட்டி பதிய ஒரு தளம் இது என்பதில் ஐயமில்லை.

தவறுகள் இல்லா மனிதம் மாற்றம் காணாது,நமக்கு உள்ளதை 
அல்லது தேவையை தெரிந்து தெளிந்தால்.நாடும் வீடும் நலம் பெறும்.


அன்று வள்ளுவம் சொன்னது(முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு)
இன்றைய நடப்பு  முகநூல்நட்பே அகநக நட்பின் ஆரம்பம் ஆனது.

நான் மேலும் உணரும் ஒரு மகத்தன விடயம் என்தனிமை தவிர்க்க 
படுகிறது.
முகநூலில் உலவும் நேரம் என் அருகில் அமர்ந்து நட்புக்கள் அளவளாவுதாகவே தோன்றும்.
கற்றது  கைமண் அளவு கல்லாதது உலகளவு.
அவ்வையின் முது மொழி.
இச்சிறப்பும் முகநூலுக்கு முழுமையாய் உண்டு.
வாழட்டும் முகநூல்,வளரட்டும் நட்பு.
நட்புடன் சேகர்.. 
 
    

Friday 29 July 2011

காதல் மனைவி கலாவதி.

                                              நானும் சாதனையாளந்தான்!!!!  
 காதலித்த காதல் கதை பள்ளி பருவம்.அதைதான்,
காதல் கதையில் சொன்னேன்.
அதன் பின் நடந்ததெல்லாம் வறுமையின் விளையாட்டு.
அதனை 16 ஆண்டுகள் சந்தித்து என் 30 வது வயதில்,
நான் சந்தித்த இன்றைய மனைவி கலாவதி.
1982 மார்ச் மாதம் மாலை நேரம் நாசே  நிறுவனம்.
அன்று தோன்றவில்லை இவர்கள் தான் என் துணை என்று.
மூன்று நாள் முடிந்து நான்காம் நாளில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
முடிவெடுத்தேன் கேட்டும் விட்டேன் என் மனைவியாக சம்மதமா.
முடிவு  சொல்ல அவகாசம் கேட்டார்.காத்திருந்தேன் ஒருமாதம்.
 எண்ணிதுணிக கருமம் துணிந்த பின் 
எண்ணுவம் என்பது இழுக்கு.
இதற்கு உதாரணம் என்மனைவி.
முடிவு வந்தபின் காத்திருப்பு,என் தமைக்கையின் திருமணம்.
1984 பிப்ரவரி மணம் முடித்து வாழ்க்கை ஆரம்பம்.

                         
                         இதுவல்ல  நான் சொன்ன சாதனையாளன்.
2011 இது நாள் வரை எனக்காக,என் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு .
நான் செய்யும் அத்துணை செயல்களிலும் துணைநின்று,
பொருளால்,உடலால்,உள்ளத்தால்,ஏற்பட்ட இழப்புக்களை, வலிகளை  
கிஞ்சித்தும் மனம்கோணமல்,வாழ்ந்து வரும் என் காதல்மனைவி கலாவதி.
   
பார்ப்பது,பேசுவது ,கொஞ்சுவது இதுவெல்லாம் தெரியாது.
என்காதல் மனைவிக்கு,என்னை மட்டும் காதலிக்க தெரியும்.
இன்றுவரை நான் வாழும் வாழ்க்கை என்னை சார்ந்து வாழ்ந்த 
அனைவருக்காகவும் வாழ்ந்து வரும் என்காதல் மனைவியை 
காதலித்து  மனம் கொண்டதும் என் சாதனைதானே.
காதலிப்பது கடினமல்ல காதலை கடைசி வரை கடைபிடிப்பது 
அதுதான் சாதனை.நானும் சாதனையாளன் இன்றுவரை.
நட்புடன் சேகர்..

Thursday 28 July 2011

காதல் வந்த கதை.

எனக்கும் காதல்வரும்.,என்று எத்தனை பேரால் சொல்ல முடியும்.
அனைவருக்கும் உள்ள காதல் எனக்கும் இருந்தது.
காதல் அது வரும் தனியாக வருமா இல்லை துணை கொண்டு வருமா?
தனியாக வந்தால் அது காதல் அல்ல,துணை கொண்டு வருவதே காதல்.

எதன் மீது காதல் கொண்டாலும்,அதற்கும் வேண்டும் நம்மீது காதல்.

                                          என்காதல் 
 குட்டி குட்டி வளர்த்த தந்தை,
 திட்டி திட்டி வளர்த்த தாய்,
தமக்கை,தனயன்,
தம்பி,தங்கை,
அணைவர்மீதும் காதல் வந்தது.
அதுஒரு பருவம்.
பள்ளிமீது,கால் பந்தின் மீது காதல் வந்தது.
இதுவும் அந்தகாலம்.

பள்ளி முடிக்கும்போது கன்னிமீது வந்ததே காதல்.
இளமை பருவம்.  

இது என்ன காதல்.காதலின் அர்த்தம் அன்று தான் தெரிந்தது.

கவியால் கதை சொன்ன கம்பன், 
கதைக்கு கவி சொன்ன கண்ணதாசன்,
பசியை பாட்டால் நிரப்பிய பாரதி,
இந்த வரிசை இல்லாமல் 
எனக்கும் வந்தது கவிதை.

இதுதான்  கன்னி மீது வரும் காதலா?
காதலித்து பார் காதலும் புரியும் =கவிதையும்!!!!
நட்புடன் சேகர்..

Saturday 23 July 2011

ஆன்மீகம் என் பார்வையில்

வணக்கம் நட்புக்களே,
                                                  ஆன்மீகம் அனைவரும் அறிந்து தெளிய வேண்டிய,
அற்புதமான வாழ்க்கை பாகம்.

என்பார்வை இதில் பலருடைய பதிவுகள்,பழக்கம்,விவாதம்,பெற்ற விளக்கம்.இதன் பலன் இப்பதிவு.
நான் பதியும் இப்பதிவு யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல.
கருத்து பரிமாற்றம் மட்டுமே.
ஆன்மீகம் இரு வகையாய் பிரித்து பார்க்கிறேன்,
அறிவுசார்ந்த ஆன்மிகம்,
பக்தி சார்ந்த ஆன்மீகம் .
 அரசனும்,ஆள்பவனும் (முதல் போட்டு ஆள்பவன்)முதலாளி.வரை.ஆன்மீகத்தை அறிவுசார்ந்தே 
பார்த்தார்கள்.
அடியார்கள் அல்லது நாயன்மார்கள்,இவர்கள் தான் 
ஆன்மீகத்தை பக்தியுடன் அணுகினார்கள்.
அறிவுசர்ந்தது, இதன் விளக்கம்.
மந்திரம் தந்திரம்,என்று கடவுளை தன்செயலுக்கு 
வசியம் செய்வது.
பக்தி இதன் விளக்கம்.
கடவுள் அவர் மட்டுமே உலகம்.
உடல் பொருள்,ஆவி (ஆன்மா)அனைத்தும் 
அவர் சார்ந்த சமயத்திற்கு தந்து மனிதம் வாழ,
வாழ்ந்தவர்கள்.
இடைப்பட்ட மனிதம் இதை உணர்ந்து தெளிந்தால் 
காவிதரித்து கபடம் ஆடும் மாந்தர்களை அடையாளம் 
காணலாம்.
நட்புடன் சேகர்..


Friday 22 July 2011

ரஜினி ஸ்பெஷல்.

வணக்கம் நண்பர்களே,
                                                   விஜய் தொலைகாட்சி வழக்கும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பரம ரசிகனில் நானும் என் மனைவியும்.
இந்த வாரம் திரு,கோபிநாத் தொகுத்து வழங்க ரஜினி ஸ்பெஷல் 
மிகுந்த எதிர்பார்பில் காத்திருந்தோம்.
திங்கள் முதல் வியாழன் வரை ரசிகன் முதல் சிறப்பு விருந்தினர் வரை 
திரு,கோபிநாத் ஒரு கேள்வியை முன்வைத்தார்.
உங்களுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினி யார்?
பதில்:கடவுள்,நண்பர்,ஆன்மா,தெய்வம்,மனிதன்,குலதெய்வம்,
இப்படியாக பழகிய,பார்த்த,பார்க்காத,ரசிகன் என்று,அனைவரும்,
தந்தபதில் தான் இது.
தவறி கூ ட ஒருவரும் அவரை சிறந்த வேண்டாம் நடிகர் என்று கூற
மறந்தார்கள்.
நடிகர்திலகம் சிவாஜிக்கு பின் நான் ரசித்த அருமையான திறமையான 
ஒருநடிகர் திரு,ரஜினிகாந்த் அவர்கள்.
அவ்ர் விரும்பிய துறை தவிர்த்து அவரை பற்றி சொல்லி என்னசாதிக்க
போகிறார்கள்.
திருந்துமா திரைத்துறை ரசிகரையும் சேர்த்து.
திரு,சய்சரண் அவர்களின் சக்தி கொடு,முத்தாய்ப்பு. 
    நட்புடன் சேகர்..

Wednesday 20 July 2011

கைபேசி களவாணிகள்.

நான் airtel இணைப்பு உள்ள ஒரு கைபேசி உபயோகிப்பவன்.
நேற்று மாலை 55 ரூபாய் எனது எண்ணிற்கு recharge செய்தேன்.
அதற்கு அவர்கள் தரும் பேசும் அளவு 43 ரூபாய் மட்டும்.
இதுவல்ல களவு,மறுநாள் காலை மிதமுள்ளதொகை 34 ரூபாய் மட்டுமே.
நான் எந்த அழைப்பும் செய்யாத நிலையில் 121 (கஸ்டமர் கேர் )அவர்களை 
அழைத்து விவரம் கேட்டால்.சிறுதுநேரம் சென்று உங்களுடைய நம்பருக்கு 
lovepack என்ற குறுந்தகவல் இணைக்கப்பட்டுள்ளது.அதற்கான கட்டணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதில் வேடிக்கை அவர்களாகவே முடிவு செய்து அவர்களே என்னுடைய 
கணக்கில் பிடித்தம் செய்து அதன் விவரம் நான் என்னுடைய கணக்கை 
பற்றி கேட்டபிறகு தெரிவிக்கிறார்கள்.
அவர்களிடமே மேலும் விவரம் தாருங்கள் யாருடைய ஒப்புதலின் பேரில் 
இப்படி செய்கிறீர்கள் என்று.உடனே அவர்கள் உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் அதை செயலிழக்க செயதுவிடுகிரோம் என்று செல்லி 
அதற்கான குறுந்தகவலை அனுப்பி வைத்தார்கள்.

இதை அவர்கள் என்னுடைய ஒப்புதலுக்கு குறுந்தகவல் அனுப்பி இருந்தால் எனக்கு இத்தனை நேரமும் பணமும் மனஉளைச்சலும்
இல்லாமல் தவிர்த்திருக்கலாம்.  
 
நான் இதில் கேட்கும் கேள்வி எத்தனை பேர் தினம் தங்களது கணக்கை சரிபார்ப்பார்கள்?
இதுவும் நமக்கு தெரியாமல் அல்லது நமது அவசர நேரத்தை பயன்படுத்தி 
களவு செய்யும் வேலை தானே.  இதைதான் தலைப்பாக தந்தேன்.
நட்புடன் சேகர்..

Sunday 26 June 2011

அறிமுகம்

அன்பு நட்ப்புக்களுக்கு சேகரின் வணக்கம்,
                                                                                       அறிமுகம்,என்னைப்பற்றி,தலைப்பை
பற்றி,நான் ஒரு நடுத்தர குடும்பத்தில் நான்காவது பிறப்பாக இரண்டாவது மகனாக பிறந்து,படிப்பில் பள்ளியுடன் முடித்து,குடும்பத்து சுமையுடன் உழைக்கும் வர்க்கமாய் சுமார் 12 வருடம் ஊதிய உழைப்பிர்க்கு பிறகு சுய தொழில் தொடங்கி,31 வது வயதில் காதல் திருமணம்.அருமை மனைவி கலாவதி.இன்று 58 வயது நடக்கும் ஒரு சராசரி இந்தியன்.
                இப்போதைக்கு  இது போதும் என நினைக்கிறேன்.

                                      தலைப்பு மனிதநேயம்.
பார்த்த,பழகிய,சகித்த,சந்தித்த,நிகழ்வுகளை,அதில் ஏற்ப்பட்ட அநுபவங்களை.
நடந்த,நடப்பு நிகழ்வுகளை,பகிர்ந்து,அதன் பின் ஊடங்களை பெறும் நோக்கோடு,இத்தலைப்பை தேர்வு செய்து உள்ளேன்.
தொடருவோம்.நன்றி.    
நட்புடன் சேகர்..