Saturday 9 March 2013

அன்பு நட்ப்புக்களுக்கு வணக்கம்,

                                                                      பெண்கள் தினம் பற்றி என்னுடைய கருத்துக்களை பதியவே இப்பதிவு.

ஒருநாளை இதற்காக என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
இருந்தும் மகளிர் என்பது தனி சிறப்பு வாய்ந்தது என்பதாலே 
இந்நாளில் என் கருத்தை பதிய இந்நாளை பயன்படித்திக்கொள்ள 
ஆசைப்பட்டேன்.

ஒருஆண் பெண்ணில்லாமல் வாழ்வது என்பது இயலாது.
அதே பெண் ஆண் இல்லாமல் வாழ்ந்துவிட முடியும்.
இது இயற்க்கை விதிகளின் படி சாத்தியமே.

இருந்தும் ஆண் இனம் எப்படி பெண்ணை இத்தனை 
அடிமை படித்தி வாழ்கிறது என்பது விசித்திரம்.

இன்றய சூழலில் பெண்விடுதலை,33 சதவிகிதம்,பெண் பாதுகாப்பு
 சமூக,பொருளாதார,கலாச்சார என்று பெண்கள் குரலும் அதற்க்கு 
ஆதரவும்,ஆதரவு தருவதுபோல் பாவனையும் தந்து பல அமைப்புகளும் 
விவாதித்து மகிளிர் தினத்தை முடித்துவைத்தனர்.

பெண்ணுக்கு ஆண் சரிநிகர் என்ற கோட்பாடு வரவேண்டும்.
அதை இருபாலரும் உணரவேண்டும்.
பொருளாதார, கலாச்சார, அரசியல், சமுதாய, சமூக,வேலைவாய்ப்பு ,
பயனமுறை,குழந்தை பராமரிப்பு,நட்பு முறை,உறவு,நீதி,சட்டம்,இப்படி 
எதிலும் பொதுமுறை வரும் வரை ஆண் என்பவன் தன்னை தனித்தே 
உணருவான்.

பாலினம் மட்டுமே வேறு மற்றவை யாவும் ஒன்று என்ற மனோ 
நிலை இருபாலருக்கும் ஏற்பட்டு மனிதம் போற்றி வாழ்வோம் 
என்ற நிலை வரும் போது,மகிளிர் தினம் என்ற ஒன்று இருந்தது
என்று ஆகிப்போகும்.

இதுதான் நட்புக்களே நான் விரும்பி இருப்பது.

நட்புடன் சேகர்..