Thursday 29 March 2012

narudal

வணக்கம் நட்புக்களே,
                                          தினம் தினம் நினைப்பது இன்று மட்டுமே சாத்தியம் ஆனது. வேறு ஒன்றுமில்லை
நினைப்பதை பதிவது.சேதிகள் பல! அதுதரும் அழத்தம்
தான் நம்மில் பலருக்கு வேதனை.

இன்றும் அரசியல் தவிர்த்து வந்த சேதி பலயிருந்தும்
கட்டாய திருமணம் செய்து கொடுமை,17 வயது மாணவி
கற்ப்பழிப்பு வழக்கில் பூக்கடை அதிபர் கைது,உடந்தையாக
இருந்த மாணவியின் தாய் அண்ணன் கைது.
இதுதான் செய்தி, இது காவல் துறை தரும் தகவலை
ஊடக துறை தருகிறது.சினிமா விமர்சனம் போல.
மாணவி கடந்த 5 வருடமாக சமந்தப்பட்ட நபருடன்
வசித்து அவரின் வருமானத்தை பகிர்ந்து பலன்பெற்று
வந்துள்ளார்.படிப்பை பசியுடன் ஒப்பிட முடியாது?
இருந்தும் அவளின் அறிவு பசி அதை ஒப்புக்கொண்டதா?
இல்லை இனி நம்மால் முடியும் என்ற மமதையா?     
நான் வைக்கும் வாதம் ஆணின் வக்கிரத்தை ஆதரிப்பது
அல்ல,பெண்ணினம் செய்யும் மந்திர வலை இதை
படம்பிடிக்க தவறுகிறோம்.உண்மை இருப்பக்கம் இருக்கவேண்டும்,ஓட்டை  சட்டங்கள் இப்படி தான்
விபீரிதங்களை உருவாக்கும்.

மாணவியின் துணிச்சல் என்று ஒரு தலைப்பு.
இதுஎன்ன  பம்மாத்து அம்மாவும் தப்பில்லை
அண்ணனும் தப்பில்லை,அத்துணை தவறும்
பணம் தந்து ஆதரித்தவன்.இதுதான் அந்த பெண்ணின்
வாதம்.

சட்டங்களை வைத்து இதை தண்டித்துவிடலாம்
சமுதாய கண்நோட்டம் இதை எங்கு கொண்டு
செல்லும்,விபச்சாரம் என்பது மனதால் மாசுபடுவது
என்பதை ஏற்றுக்கொண்ட காலம்.இதற்குமேல் இதில்
விமர்சிக்க ஏதும்இல்லை.
நட்புடன் சேகர்..   
  

Thursday 12 January 2012

விழாக்கள்,பண்டிகை,வாழ்த்துக்கள்.

அன்பு நட்புக்களுக்கு வணக்கம்,

வாழ்த்துக்கள் பலவடிவங்களும்,வார்த்தைகளும் கொண்டு நம்மை நாம் பிறருக்கு வெளிப்படுத்தும் செயலாகவே கருதுகிறேன் .
விழாக்கள் ,
பிறந்தநாள், திருமணநாள்,இவை அன்றி
இன்னும் சிலர் பொருள் வாங்கியது என
அதற்கும் விழா என்று விழாக்களை நாம்
கொண்டாடி வருகிறோம்.
பண்டிகை,
சமயம் சார்ந்து அவரவர் மரபுக்கு
தக்க அனுசரிப்பது என்பதே இதுவரை
நாம் அறிந்த ஒன்று.
நான் இந்த பதிவை தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள் என்று பதிவிடநிணைத்து ஆரம்பித்தேன்.அதில்வந்த குழப்பம்
தமிழ் புத்தாண்டு, தமிழர் புத்தாண்டு இப்படி  இருவகையாய் இன்று பிரிந்து கிடக்க இதை எப்படி சரியாய் முடிவெடுப்பது  என்பதில் தான் .
விழா என்றால் தமிழ் புத்தாண்டு ,
பண்டிகை என்றால் தமிழர் புத்தாண்டு
என்று நினைத்து மீண்டும் குழப்பமே.இதிலும்  கட்சி அரசியல்
வந்து நம்மையும் தமிழயும் குழப்புகிறது.
தமிழாய் தமிழனாய் வாழ அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று நட்புடன் என்றும் சேகர்..