Friday 11 August 2017

புரியாத புதிர்கள்..

வணக்கம் நட்புக்களே,
                                              நிறையவே யோசித்தேன் அத்துனையும் பதியத்தான்
ஆசை,பலவித சங்கடங்கள் வாழ்வில் வருவது அனைவருக்கும் இயல்புதானே.
எனக்கும் வந்தது தேவைகள்,அதை தேடி ஓட்டங்கள்.கிடைத்தது சில,கிடைக்காதது பல இருந்தும் மனதும் உடலும் வாழ்கிறது.
இயற்கை அருளும் காலம் வரை.

 இன்றைய தலைப்பு என்னில் உறுத்தியதை உங்களிடம் பகிர்கிறேன்.


பத்திரிகை மற்றும் ஊடகங்களில் முகமூடி கொள்ளையர்கள் என்று
காவல் துறை கைது என்று சிலரை காண்பிக்கிறார்கள்,நிழற்படமாக
தருகிறார்கள்.அதில் அவர்களை முகமூடியுடன்(முகம் கருப்பு துணியால்
மறைக்கப்பட்டு)காட்டுவது எதனால்?முகம் தெரிந்தால் மற்றுமொரு
சந்தர்ப்பத்தில்  அவர்களை அடையாளம் காண வாய்ப்பிருக்கும்.
இதை பத்திரிகை நண்பர்கள் ஏன் காவல் துறையிடம் கேட்காமல்
அவர்கள் தரும் அல்லது மறுப்பில்லாமல் செய்கிறார்கள்.

அரசியல் மற்றும் சினிமா துறை சார்ந்த குற்றங்களை நிகழ்வுகளை
அதிக முக்கியத்துவம் தரும் அவர்கள் சமுதாய முக்கியத்துவம்
வாய்ந்த அணைத்து விடயங்களிலும் வெளிப்படையான கொள்கையை  
கடைபிடிக்க முயலுவார்களா.
நட்புடன் சேகர்..

No comments:

Post a Comment