Monday 5 December 2011

விமர்சனம் விமர்சனம்

அன்பு நட்புக்களுக்கு வணக்கம்,
                                                                           ஒருவிமர்சனம் என்பது படைப்பாளியை ஊக்குவிக்க அல்லது திருத்தி கொள்ள             பயன்படவேண்டும்.இது பத்திரிக்கை யாளனுக்கு மிகவும் முக்கியம்.
இன்று தினத்தந்தி சினிமா விமர்சனம் என்னை இதை எழுத தூண்டியது.
போராளி திரு,சமுத்திர கனி இயக்கம் திரு,சசிகுமார் மற்றும் பலரின் கடுமையான உழைப்பில் வெகு  நேர்த்தியாக கையாளப்பட்ட  சமுக சிந்தனை உள்ள தமிழ் படம்.
இதை நான் தனிப்பட்ட முறையில் விவரிப்பது விமர்சனத்தில்  வராது.என்தாக்கத்தின் வெளிப்பாடு

ஒருபொது ஜன பத்திரிகை அதன் விமர்சனம் என்பது எத்தனை தாக்கங்களை உருவாக்கும் என்பதை உணரவேண்டும்  என்பதை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்.
விமர்சனம் எழுதிய நண்பர் கதையின் கருவை அதன் உறவுகளை  மிகவும் தவறாக குறிப்பிட்டு கடமைக்கு எழுதியதாகவே தெரிகிறது.புரியாவிட்டால் மீண்டும் ஒரு முறை படத்தை பார்க்கவும்.
என்னுடைய கடந்தகால சினிமா பார்த்த வரலாற்றில் என்னை தகித்த தாக்கம் செய்த படங்களில் முதல் படம்துலாபாரம். இரண்டாவது மாகநதி,அதன் பிறகு போராளி.
இப்படி சில படங்கள் மட்டுமே சினிமா என்பதை தாண்டி சில சமுதாய தாக்கங்களை உருவாக்கும்.
நண்பர்கள் இது குறித்து இப்பதிவை சரியான தளத்தில் பதிவேற்ற விரும்புகிறேன்.

  நட்புடன் சேகர்..

No comments:

Post a Comment