Wednesday 14 December 2011

காதலும், நட்பும்..

அன்பு நட்புக்களே,  
                                 காதலும்,நட்பும்
வேறு வேறு தளங்கள்,ஆனால் புரிதலின் ஆரம்பம் என்பது
மட்டும் இரண்டுக்கும் பொதுவாய் அமைந்து போனது.

காதல் புரிவது நம்மை அடுத்த பாலருக்கு புரியவைப்பது ,அடுத்த பாலினத்தை புரிய முற்படுவது.
இதன் ஆரம்பம்-சற்று தாமதித்தாலும் -தரம் தாழ்ந்தாலும்
விபிரீதம்-விளைவிக்க தயங்காது.

இதை வாலிபம் தவிர்த்து பார்த்தால்-பல கோணங்கள்
புரியும்.
காதல் புரிய -புரிய கசக்கும்,அல்லது விலகும்.
நட்பு புரிய-புரிய வளரும்-விளங்கும்.
காதலில் அடிப்படை அறிந்து கொள்ள அதற்கு   
இலக்கணம் இல்லை.
நட்பின்அடிப்படை  இலக்கணமே ஏற்பது.

     அண்ணலும் நோக்கி ,அவளும் நோக்கி
                          வந்த காதல்
   அரசகுலம் சந்தித்தது-சரியாய் போனது.

  அம்பிகாபதி ஏன் அமராவதி ஆனது
  சமுதாய ஏற்றமா,சாதிய மாற்றமா?
 தோல்வி கண்ட காதல் எல்லாம் காவியம் ஆனது.
 வெற்றி என்பது காதலுக்கு கிடையாது.

 புரிதலின் ஆரம்பம் காதல் என்றால்,
வெற்றி என்பது புரிந்த தவறாய் முடிந்துவிடும்.
தவறு எப்படி வெற்றியடையும்?
ஆதலால் காதலுக்கு வெற்றி கிடையாது.

நட்பு நம்மை நாம் அறிய நமக்கு கிடைத்த
அற்புத கருவி--
அதை நாம் கையாளும் விதம்-தீமையும்
நன்மையும்,விகிதம் மாறும்.

எப்பொருளும்  ஏற்பது எல்லாம் முழுபயன்
தராது.உணவு உட்பட.

உண்ட உணவில் எத்தனை கழிவு என்பது
யாருக்கு தெரியும்.
இருந்தும் ஏற்கிறோம்,பிரிப்பது நாம் அறியா
வண்ணம் நடப்பது இல்லையா?
ஏற்பது என்பது நட்பின் இலக்கணம்.
கழிவை கழித்து வலு சேர்க்க நட்பு
அவசியம்.
காதல் வரும் கண்டஉடன்-காணாத போதும்.
 
காதலே கூடாதா என்பது போல் அல்லவா
செல்கிறது காதலும்-நட்பும்.முடிவுதான் என்ன?

பாலினம் தவிர்த்து வந்தால் நட்பாய் ஏற்கும்
நாம் எதிர் பாலினத்தை ஏன் காதலால் கவரவேண்டும்?
 
காதலில் வரும் பந்தம் சமுதாய மாற்றம் தரும்
என்று வாதிட்டால்-அதை விட முட்டாள்தனம்
வேறில்லை.

காதல் இல்லாத வாலிபம் விரும்ப தகாதது.
முரணாக இருக்கிறதா!!!
காதலை வேறுவகை படுத்தி ரகசிய சிந்தனையில்
அடைத்ததன் பலன்,   
 காதல் என்பது பலவேறு கோணங்களை சந்தித்து
சீரிழந்து போனது.

சிந்தனை சிதறல்களை செம்மை படுத்தாமல்,
நுனிமழுங்க வைத்தது.

காதல் புரி-புரிகிறவரை-புரியாத போது?

இரை-இன்பம்-இனப்பெருக்கம்,இவை முன்றும்
உயிரினத்தின்  பொது மறை.
இவையன்றி ஏன்-எதற்கு என்ற இறை-தேடியது
மானிட முறை.
மாண்டு-மாண்டு மீண்டாலும்-
சிரிக்கவும்-சிந்திக்கவும் தெரிந்த உங்களுக்கு
தெரியாதா என்ன செய்ய வேண்டும் என்று!!!!    
நட்புடன் சேகர்..

No comments:

Post a Comment